யாழில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி: சிக்கிய பெண்கள்
யாழில் (Jaffna) விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நேற்று (09.04.2025) இடம்பெற்றுள்ளது.
நாவற்குழி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதியே யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த மூன்று 40, 42, 53 வயது உடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி காவல்துறையினர் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
