மீண்டுமொருமுறை நிரூபணம் -அதிபர் தேர்தல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட பதிவு
மீண்டுமொருமுறை நிரூபணம்
நாடாளுமன்றம் பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் இருப்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடாளுமன்றம் அதன் ஆணையை இழந்து விட்டது. எனவே நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படவேண்டுமென நான் மீண்டும் சொல்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அநுரகுமார திஸநாயக்க, நல்ல கருத்தை சொல்லியுள்ளார்.பகிரங்கமாக ஒப்புதல் அளித்தவர்களின் எண்ணிக்கை என தெரிவித்துள்ளார்.
Parliament has again shown that it is in the clutches of @PodujanaParty that had lost its mandate. I repeat that the P must be dissolved. @anuradisanayake made a good point: number of those that publicly endorsed @DullasOfficial is more than 113! What happened then???
— M A Sumanthiran (@MASumanthiran) July 20, 2022
113 ற்கு மேல், அடுத்தது என்ன என
டளஸ் அழகப்பெரும தனது பதிவில்,113 ற்கு மேல், அடுத்தது என்ன என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.