தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சில நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் கலந்துரையாடபட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்ற போதே மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி, கலந்துரையாடலின் போது,
தொல்பொருளியல் நிதியம்
“குருந்தூர் விகாரை தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் மேற்கொண்ட தலையீடுகள்.

அத்துடன், தற்போது, இலங்கையில் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ள இடங்கள்.
விசேடமாக, மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் இந்தத் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாத்தல்.
தொல்பொருளியல் நிதியமொன்றை ஆரம்பித்தல்” போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.