பிரதமர் வழங்கிய அனுமதி! நன்றி கூறிய எம்.பி
srilanka
parliament
corona vaccine
By Vasanth
கொவிட் -19 தொற்று காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமைக்கு சபையில் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்தார்.
நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி, கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருப்பது தொடர்பாக பிரதமரிடம் வினவினார்.
அதற்கு பிரதமர் பதிலளிக்கையில், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவோம் என்றார்.
பின்னர் சற்று நேரத்தில் சபையிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் எழுந்து, கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தமைக்கு முஸ்லிம் சமூகம் சார்ப்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி