பேருந்துக் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் வெலுத்தும் முறை அறிமுகம் : வெளியான அறிவிப்பு
பேருந்துக் கட்டணங்களை செலுத்தும் முறை தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ''இலங்கை போக்குவரத்து சபை முன்னெடுத்து வரும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள், பேருந்து சேவைகளின் தரத்தை உயர்த்தவும், பயணிகளுக்கான அசௌகரியங்களைக் குறைத்து வசதிகளை மேம்படுத்தவும், தனியார் துறையுடன் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளது.
கட்டணம் செலுத்தும் முறை
பொதுப் போக்குவரத்துச் சேவையை மறுசீரமைக்கவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த நவீன கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொதுப் போக்குவரத்திற்கான தரநிலைகள் இலங்கை போக்குவரத்துச் சபையின் மூலம் நிறுவப்பட வேண்டும். அத்தகைய தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டவுடன் தனியார் நிறுவனங்கள் அதைப் பின்பற்றும்'' என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |