அமைதிக்கான நடைப்பயணம் அரச ஆதரவுடன் இன்று ஆரம்பம்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'அமைதிக்கான நடைப்பயணம்' அரச ஆதரவுடன் இன்று ஆரம்பமானது.
குறித்த நடைப்பயணம் இன்று (22.04.2026) காலை 6.30 தம்புள்ளையிலிருந்து தொடங்கிய நிலையில், ஏப்ரல் (28.04.2026) வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடை பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
அமைதி நடை பயணம்
அந்தப் பயணமே தற்போது இலங்கையில் 'ஏஹிபஸ்ஸிகோ' அமைதி நடை பயணம் என்ற பெயரில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பன்னாகர தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்று (22.04.2026) நாட்டை வந்தடைந்தனர்.
இதன்போது, தேரர்களுடன் 'அலோகா' என்ற நாயும் அமைதி நடைப் பயணத்தில் இணைந்துள்ளது.
குறித்த நடை பயணம் இன்று மாத்தளை அலுவிஹாரை வரை இன்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |