நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து முன்வைக்கப்படவுள்ள பிரேரணை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான பிரேரணையை எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கொழும்பில் (Colombo) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கான முன்மொழிவை நாங்கள் முன்வைக்கிறோம்.
பொதுமக்களின் எதிர்ப்பு
இதற்கு பொதுமக்களின் எதிர்ப்பும் இல்லாமல் இல்லை, அரசாங்கம் அதற்கேற்ப செயல்படும் என்று நம்புகிறேன்.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, ரூபாய் மதிப்பு சரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் இந்தத் தேவையைப் புரிந்துகொண்டு, அதிகபட்ச விலை வரம்பிற்குள் அவற்றைக் கொண்டுவர வேண்டும்.
டிஜிட்டல் முறை
வரி ஏய்ப்பு என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை, வரி செலுத்துதல்களை டிஜிட்டல் முறையில் செய்யுங்கள் அத்தோடு, இதை திறமையான அரசு அதிகாரிகள் செய்தால் நாட்டின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.
நாட்டின் பொருளாதாரம் நவீனமயமாக்கல் மூலம் மட்டுமே முன்னேற முடியும், தொழில்நுட்பத்தால் மாசுபாட்டை நீக்க முடியும். இவைதான் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று நான் நினைக்கிறேன்.
அரசாங்கம் இப்போது தனது வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |