கைதிகள் இருவரிற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி கைதிகளான 43 மற்றும் 46 வயதுடைய இருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதே வேளை பரீட்சை விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பரீட்சை விதிமுறைகளை மீறி செயற்படும் பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின், பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
மேலும் பரீட்சை வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.