உர விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் யூரியா உரத்தை தனியார் நிறுவனங்களுக்கும் விநியோகிக்க அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் துஷாரா விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ''நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் தற்போது உரத்தட்டுப்பாடு காரணமாக கடுமையான மனஅழுத்தத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.
உர விநியோகப் பிரச்சினைகள்
சந்தையில் செயற்கையாக போலியான உரத் தட்டுப்பாட்டை உருவாக்க சில தரப்புகள் முயற்சிக்கக்கூடும் என்பதால், அவ்வாறான செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம்.

நாட்டில் தற்போது தேவைக்கேற்ப போதுமான அளவு யூரியா உரம் கையிருப்பில் உள்ளது.
மேலும், இந்த வாரத்திற்குள் நிலவி வரும் உர விநியோகப் பிரச்சினைகள் பெருமளவில் தீர்க்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விநியோக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மகா பருவ விவசாயத்திற்குத் தேவையான உரங்களை முன்கூட்டியே இறக்குமதி செய்து விநியோகிக்கும் திட்டத்தையும் அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |