சிக்குவாரா பிள்ளையான்...! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம்

CID - Sri Lanka Police Pillayan United Kingdom Crime Branch Criminal Investigation Department
By Thulsi Nov 20, 2024 09:42 AM GMT
Report

புதிய இணைப்பு

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக வெளியான சனல் 4 காணொளி குறித்து வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் காலை வாக்குமூலம் வழங்க வந்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 5 மணி நேரத்தின் பின்னர் வாக்குமூலம் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்.

இரண்டாம் இணைப்பு

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

சிக்குவாரா பிள்ளையான்...! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம் | Pillayan Called To The Criminal Investigation Dept

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 (Channel 4) தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிக்குவாரா பிள்ளையான்...! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம் | Pillayan Called To The Criminal Investigation Dept

இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார்.

முதலாம் இணைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் (Pillayan) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையானை இன்று (20) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு சிஐடியினர் (CID) உத்தரவிட்டுள்ளனர்.


சர்ச்சைக்குரிய விடயங்கள் 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் (United Kingdom) சனல் 4 நிறுவனத்திற்கு, முன்னாள் செயலாளர் அசாத் மவ்லானா வழங்கிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டுள்ளார்.

சிக்குவாரா பிள்ளையான்...! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம் | Pillayan Called To The Criminal Investigation Dept

சனல் 4 காணொளியில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது, பிள்ளையான் (Pillayan) மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

தனிமைப்படுத்தப்பட்ட 500 சிறிலங்கா இராணுவத்தினர் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட 500 சிறிலங்கா இராணுவத்தினர் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024