ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு நீதி அமைச்சர் பதிலடி
ஈஸ்டர் தாக்குதலை வைத்து எந்த ஒரு கட்சிகளும் அரசியல் இலாபம் தேட முடியாது என நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் அநுர குமார திசாநாயக்கவின் தவறு போல் எதிர்க்கட்சிகள் சித்தரிப்பது நகைப்பிற்குரிய விடயம் என்றும் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
முறையான விசாரணை
இது எங்கள் தவறு என்று நம்புவது இப்போது கடினமாக உள்ளது. அப்போது அமைச்சரவை அமைச்சர்களாக இருந்தவர்கள் இப்போது மறுபுறம் உள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் அறிவுறுத்தல்கள் ஏன் பின்பற்றப்படவில்லை? எப்படியிருந்தாலும், நாங்கள் முறையான விசாரணைகளை நடத்தி வருகிறோம்.
வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கு ஏற்கனவே ஒரு அமைச்சரவை அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. இது எங்கள் கொள்கை அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
