இந்தியா பறந்தார் பிரதமர் ஹரிணி
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 விமானத்தில் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ விஜயம்
பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நேற்று (15) அதிகாலை நாட்டை வந்தடைந்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் அரச சபையின் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இரு இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
