மனைவியால் கணவரின் சகோதரிக்கு நிகழ்ந்த அவமானம்
arrest
police
whatsapp
By Sumithiran
தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக வேறு நபர்களுக்கு அனுப்பிய 32 வயதுடைய பெண் ஒருவர் கண்டி கணனி குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (மார்ச் 10) மாத்தளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் மூலம் பிறருக்கு அனுப்பியதாக கண்டி கணனி குற்றத்தடுப்பு பிரிவில் கணவரின் சகோதரி முறைப்பாடு செய்ததை அடுத்து சகோதரனின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பெண் தனது மைத்துனருடன் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மற்றும் முறைப்பாடு செய்த இருவரும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி