அநுரவுக்கு எதிராக அவதூறு பரப்பிய காவல்துறை அதிகாரி அதிரடி கைது!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரங்கள் தொடர்பாகப் காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது குறித்த விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான காவல்துறை அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட காவல்துறை அத்தியாட்சகர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுப் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரி இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |