கடற்படையினரால் கையளிக்கப்பட்ட கஞ்சாவை களவாடிய காவல்துறை அதிகாரி!
Cannabis
Navy
stole
Police officer
By MKkamshan
காவல் துறை அதிகாரி ஒருவர் கேரளாக் கஞ்சாவை களவாடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாதகல் கடற்பரப்பில் இம் மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி கஞ்சா கடலில் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா இளவலை காவல்துறையினரிடம் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட கேரளாக் கஞ்சாவை இளவாளை காவல் நிலைய உப பரிசோதகர் ஒருவர் களவாடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட கஞ்சா தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்து சான்றுப் பொருளாக கஞ்சாவை ஒப்படைத்த சந்தர்ப்பத்தில் கஞ்சாவில் ஒரு பகுதியினை குறித்த காவல்துறை உப பரிசோதகர் கையாடல் செய்துள்ளார்.
இதனையடுத்து உப பரிசோதகர் கடந்த 17 ஆம் திகதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி