அரசாங்க உறுப்பினருடன் தகராறு: காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்!
Sri Lanka
Sri Lanka Police Investigation
Law and Order
NPP Government
By Kanooshiya
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் தகராறில் ஈடுபட்ட சூரியகந்த காவல் நிலைய கான்ஸ்டபிள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரையில் குறித்த காவல் நிலைய கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் F.U வுட்லர் இதனை தெரிவித்தார்.
பிணையில் விடுதலை
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருடன் தகராறில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிளை நேற்று (22.12.2025) பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் அவரை 200,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தது.
குற்றவியல் மிரட்டல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் எம்பிலிபிட்டிய காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்