பெண் காசாளர் மீது துப்பாக்கிசூடு : சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
17 நவம்பர் 2025 அன்று மீட்டியகொடவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, மீட்டியகொட காவல் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், ஆனால் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தால் பல பிடியாணை உத்தரவு
கந்தாரா மற்றும் அம்பலாங்கொட காவல் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாகவும் சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும், பாலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அவருக்கு எதிராக பல பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்த எவரும் 071‑8591481 (பொறுப்பாளர்/மீட்டியகொட) அல்லது 091‑2260423 (மீட்டியகொட காவல் நிலையம்) என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |