விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை! காவல்துறை அதிரடி
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாளை(22) தலங்கம காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லவில் உள்ள சிறிலங்கா ராணுவத்தின் போர்வீர்ரகளின் நினைவிடத்தில் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே மேற்படி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த உத்தரவின்படி, குற்றம் சாட்டப்பட்ட விமல் வீரவன்ச நாளை காவல்நிலையத்தில் முன்னிலையாகத் தவறினால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 172ஆம் பிரிவின் கீழ் அவருக்குத் தண்டனை வழங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அத்துமீறி நுழைதல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தலாங்கம காவல்துறையினர் இச்சம்பவம் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்றை நேற்று முன்தினம் (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |