இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை
Sri Lanka Police
Money
By Jaso
அங்கீகரிக்கப்பட்ட பணமாற்று மையங்கள் அல்லது உரிமம் பெற்ற வங்கிகள் மூலமாக மட்டுமே வெளிநாட்டு நாணயத்தைப் பரிமாற்றம் செய்யுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் மூலம் பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் கள்ள நோட்டு மோசடிகளுக்கு பலியாகும் அபாயம் உள்ளது என்றும் அது எச்சரித்துள்ளது
இது தொடர்பாகப் பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP) F.U. வூட்லர், அனைத்து வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளையும் அங்கீகரிக்கப்பட்ட பணமாற்று மையங்கள் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே மேற்கொள்ளுமாறு வெளிநாட்டினரை வலியுறுத்தினார்.
அங்கீகரிக்கப்படாத பணமாற்று சேவை
அங்கீகரிக்கப்படாத பணமாற்று சேவைகளைப் பயன்படுத்தும் வெளிநாட்டினர், கள்ள நோட்டு மோசடிகள் மற்றும் பிற மோசடி நடவடிக்கைகளுக்கு பலியாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்