ஈரானுடனான சாத்தியமான உடன்பாடு! யூகங்களை கிளப்பிய ட்ரம்பின் பதிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "செவ்வாய்க்கிழமை, கிழக்கு நேரப்படி இரவு 8:00 மணி" என எந்த விளக்கமும் அளிக்காமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், ஈரான் குறித்து ஒரு அறிவிப்பு வரக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
அவரது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் வெளியான அந்தப் பதிவு, தெஹ்ரானுடன் செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போதுமான வேகத்தில் செயல்படத் தவறினால், "எல்லாவற்றையும் தகர்ப்பது" மற்றும் "எண்ணெயைக் கைப்பற்றுவது" குறித்து பரிசீலித்து வருவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ள பின்னணியில் அவர் இ்தனை கூறியுள்ளார்.
ஈரான் பதிலளிக்கவில்லை
இந்நிலையில் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற ட்ரம்பின் கூற்றுக்கு ஈரான் பதிலளிக்கவில்லை. எனினும் ட்ரம்ப் தனது இறுதி எச்சரிக்கையை மேலும் கடுமையாக்கினார்.

செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள அனைத்து மின் நிலையங்களையும் மற்றும் பிற அனைத்து வசதிகளையும் அது இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அவர் தெளிவற்ற முறையில் பதிலளித்ததோடு, "மிக விரைவில்" பொதுமக்களுக்குத் தெரிவிப்பதாக மட்டும் கூறியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |