நாடு முழுவதும் மின்வெட்டு! தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!
சுழற்சி முறையில் இன்றைய தினமும் சுமார் 5 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே 5 மணித்தியால மின்விநியோக துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில் 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
கொழும்பு 01 தொடக்கம் கொழும்பு 15 வரையான பிரதேசங்களிலும் சுழற்சி முறையில் இன்று முதல் மின்விநியோகத்தை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.