முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

President of Sri lanka Northern Province of Sri Lanka Preschool Children National People's Power - NPP
By Sathangani Feb 28, 2025 06:36 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மானிப்பாய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளமானது வலயக் கல்வி அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையான 6 ஆயிரம் ரூபாவாக மட்டுமே காணப்படுகின்றது.

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை...! சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை...! சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி

வடக்கு மாகாண சபை

2013 வடக்கு மாகாண சபை அமைந்த பின் அப்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த பா.கஜதீபன், போன்றோரின் முயற்சியாலும் அப்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜாவின் ஒப்புதலாலுமே அது கூட சாத்தியப்பட்டது.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Pre School Teachers Salary Allowances Increase

அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் ஆசிரியர் ஒருவருக்கு 30,000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை நிரந்தர சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதனை வடக்கு மாகாண சபையின் கீழ் எடுக்க நடவடிக்கை எடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. இன்றும் முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இது நடைமுறையிலுள்ளது.

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

6000 ரூபா உதவித்தொகை

மேலும், 2018இன் பின்னர் வடக்கு மாகாண சபை பதவி நிறைவிற்கு பின் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றால் நடாத்தப்படும் முன்பள்ளிகளில் நிரந்தர நியமனமுள்ள, போட்டிப் பரீட்சை மூலம் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற விதிகளுக்கு உட்பட கூடிய முன்பள்ளி ஆசிரியர்களும் 30,000 ரூபாவிற்கு உட்பட்ட சம்பளத்துடன் வடக்கு மாகாண சபையால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Pre School Teachers Salary Allowances Increase

இருந்த போதும் பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் வெறும் 6000 ரூபா உதவித்தொகை மட்டுமே வாழ்வாதாரமாக பெறுகின்ற இடரான பொருளாதார நிலையிலேயே கடமையாற்றி வருகின்றனார்.

இது மிகவும் பாதிப்பான நிலையாகும் என்பதுடன் முன்பள்ளி ஆசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

நாட்டை வந்தடைந்த வாகனங்கள் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

நாட்டை வந்தடைந்த வாகனங்கள் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பலத்த எதிர்பார்ப்புக்களோடு வடக்கு மாகாண தமிழ்மக்கள் வாக்களித்து 05 ஆசனங்களை வழங்கியுள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Pre School Teachers Salary Allowances Increase

இந்தச் சூழலில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாகவுள்ள வடக்கு மாகாண ஆளுநர் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி தற்போதைய பிரதமரே கல்வி அமைச்சராகவும் உள்ள காரணத்தினால் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதன் மூலம் வடக்கு மாகாணத்திலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகள் உட்பட அனைத்து விதமான முன்பள்ளிகளையும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பள்ளிகளாக உள்வாங்கிட நடவடிக்கை எடுத்து அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கும், சம்பள அதிகரிப்பினை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்‌சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி

ராஜபக்‌சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023