ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு
பாபா வாங்கா, நோஸ்ட்ரடாமஸ் போன்ற தீர்க்க தரிசிகள் கடந்த காலங்களில் எதிர்காலத்தைப் பற்றிய பல கணிப்புகளை செய்தனர்.
அவர்களின் பல கணிப்புகள் நிறைவேறியதால் வரலாற்றில் அவர்கள் அழியாப் புகழ் பெற்றனர். தற்போது அவர்களைப் போலவே பலரும் எதிர்காலத்தைப் பற்றிய பல கணிப்புகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஜப்பான் பாபா வாங்கா கணித்துள்ள சில தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது.
பூமிக்கு பேரழிவு
ஜப்பான் நாட்டை சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி என்பவரை "புதிய பாபா வங்கா" என்று அழைக்கிறார்கள். இவரும் வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஜூலை 5ம் திகதி ஒரு பேரழிவு ஏற்படும். ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் பிளவு ஏற்படும். சுனாமி அல்லது மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் என கணித்துள்ளார்.
கடந்த 2011ல் 18,000 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகு நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அவர் முன்பு துல்லியமாகக் கணித்தது குறிப்பிடத்தக்கது.
பாபா வாங்கா கணிப்பு
இதனால் ஜப்பானுக்குச் செல்வோர் விமான முன்பதிவுகள் 83% குறைந்துள்ளன. ஹாங்காங்கில் மட்டும் 50% வரை புக்கிங் குறைந்துள்ளது. பலரும் இவரது கணிப்பால் தங்கள் விடுமுறை டிரிப்பை ரத்து செய்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய் கூறுகையில், "சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற வதந்திகள் பரவுவது சுற்றுலாத் துறையைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்ல தேவையில்லை.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் கூட வதந்திகளைப் புறக்கணித்துவிட்டு ஜப்பான் வர வேண்டும் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
