ரணில் தலைமையில் யாழ் மண்ணில் இடம்பெறவுள்ள சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வுகள்!
யாழ்ப்பாணத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற உள்ளதாக அதிபரின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வுகள்

அதேவேளை அதிபரின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அதற்கு பின்னர் பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயற்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

அதற்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கலாசார மத்திய நிலையத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில் இருக்கிற ஆளுநர், இந்திய துணை தூதுவரகத்தின் அதிகாரிகள், யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் மத்திய கலாசார அமைச்சுடன் இணைந்ததாக கலாசார மத்திய நிலையத்தில் கலாசார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரணில் தலைமையில்

அத்தோடு, சுதந்திரதின நிகழ்வினை முக்கியமாக மாகாண மட்டத்திலே இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வதற்கு ஏற்றவாறாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே அதிபர் கலந்துகொள்ள உள்ளதால் நிகழ்வுகள் பெரியளவில் இடம்பெற்றவுள்ளது” எனவும் தெரிவித்தார்.