அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த கோட்டாபய!
அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஏற்க மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை பதவி விலகியதை அடுத்து நான்கு பேர் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டது.
இதன்போது, அலி சப்ரி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அலி சப்ரி அறிவித்திருந்தார்.
அத்துடன், தேவை ஏற்படின் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய உள்ளதாகவும் அவர் அரச தலைவருக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை அரச தலைவர் இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக அவரே அடுத்த அமைச்சரவையிலும் நிதியமைச்சராக பொறுப்பேற்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையிலும் அவரே பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்