சட்டத்தரணியின் மகனை நடுவீதியில் தாக்கிய காவல்துறை அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல்
investigation
police officer
assulat
By Jaso
இரத்தினபுரி - கிரியெல்ல வீதியில் இன்று காலை சட்டத்தரணியின் மகன் ஒருவரை தாக்கிய சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை தலைமையகத்தினால் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டமை தொடர்பில் குறித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிரேஸ்ட பிரதி காவல் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு(ranmal kodithuvakku) மீதே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.