சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினருக்கு பதவி உயர்வு
இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ 8514 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் 480 அதிகாரிகள் மற்றும் 8034 மற்ற ஏனைய தரநிலைகளை கொண்டவர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 7 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாகவும், 16 கேணல்கள் பிரிகேடியர் தரமாகவும், 36 லெப்டினன்ட் கேணல்கள் கேணல் தரமாகவும், 50 மேஜர்கள், லெப்டினன்ட் கேணல் தரமாகவும், 207 கப்டன்கள் மேஜர் மற்றும் லீ ஆகவும் பதவி உயர்வு பெற்றனர்.
480 இராணுவத்தினர் லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
ஜெனரல் சவேந்திர சில்வா 2019 ஆண்டு ஓகஸ்ட் 18 ஆம் திகதி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் பெருமளவிலான அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.