இரண்டு நாட்களில் அனைவரும் கூண்டோடு கைது - காவல்துறை மா அதிபர் உறுதியளிப்பு
Sri Lanka Police
Galle Face Protest
Bar Association of Sri Lanka
Galle Face Riots
By Sumithiran
கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய அனைவரும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை மா அதிபர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் உப தலைவர் அனுர மத்தகொட ஆகியோர் காவல்துறை மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடனான சந்திப்பின் போது அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்றையதினம் காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சேந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்