மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மின்கல சக்தி சேமிப்பு முறைமையின் கீழ், மேலும் ஏழு களஞ்சிய கட்டமைப்புகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக இந்த திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏழு சக்தி சேமிப்பு களஞ்சிய கட்டமைப்புகளும் பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சாரப் பரிமாற்ற உப நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மின் விநியோகக் கட்டமைப்பு
இந்த சேமிப்பு கட்டமைப்புகளை பயன்படுத்தி 280 மெகாவோட் (MW) மின்சாரத்தைச் சேமிக்க முடிவதுடன், தினமும் 70 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஜூன் மாத ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட 8 கட்டமைப்புகளை தெரிவு செய்யப்பட்ட உப நிலையங்களுக்கு அருகில் நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் ஜூலை மாத இறுதியில் நிறைவடைவதுடன், அதன் மூலம் 80 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
YOU MAY LIKE THIS
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்