யாழ் உள்ளிட்ட பகுதிகளில் 15 வரை மழை தொடரும் - நாகமுத்து பிரதீபராஜா
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகள் அதற்கேற்ற வகையில் தங்களுடைய அறுவடை செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது.
குளிரான காலநிலை
மத்திய. மேல், சபரகமுவா, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் எதிர்வரும் 15.01.2026 வரை மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இரவில் வெப்பநிலையில் ஏற்படும் வீழ்ச்சியும் ஈரப்பதன் மாற்றமும் குளிரான காலநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |