மகிந்தவின் வீட்டை எரித்தவர்கள் இரக்கத்திற்கப்பாற்பட்டவர்கள்! - கடும் கோபத்தில் சுப்ரமணியம் சுவாமி
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடு எரிக்கப்பட்டது குறித்து இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
"பிரதமரின் இல்லம் எரிக்கப்படுகின்றது என்றால், அதற்குக் காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல.
எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது", எனக் குறிப்பிட்டுள்ளார்.
Burning down the residences even of the Prime Minister, shooting dead MPs by mobs means rioters don’t deserve any mercy. We cannot allow another Libya in our neighbourhood.
— Subramanian Swamy (@Swamy39) May 11, 2022
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை, சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் அதிலும் குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, சிறிலங்காவுக்கு இந்திய இராணுவத்தை அனுப்புமாறு கோரிக்கை!