சஜித்திற்கு அடுத்த ஆப்பு! இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோட்டாபய ரணில் போட்ட திட்டம்

Dr Rajitha Senaratne Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lankan political crisis
By S P Thas May 16, 2022 11:59 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள்.

இதுவரை கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு ரணில் அழைக்கவில்லை என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவாக அமைச்சரவை அமைக்கப்பட்டால்தான் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வர். இப்போதும் அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடல்களை நடத்த முடியும்.

அதேவேளை, சரியான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றார். இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய அவர், இந்த நடவடிக்கையும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமே நான் பார்க்கிறேன்.

இதற்கிடையில், சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது என்றார்.

முன்னதாக சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்த போதிலும், அதனை அவர் மறுத்திருந்தார். எனினும், ரணில் விக்ரமசிங்க தான் பதவியேற்கத் தயார் என்று அறிவித்ததன் பின்னர் சஜித் கோட்டாபயவிற்கு நிபந்தனை விதித்து தானும் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமராக ரணில் பதவியேற்றதன் விளைவு, சஜித் அந்த வாய்ப்பை இழந்தார். அதேபோன்று தற்போதைய அரசியல் சூழலில் எதிர் கட்சி தலைவர் பதவியையும் அவர் இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025