சஜித்திற்கு அடுத்த ஆப்பு! இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோட்டாபய ரணில் போட்ட திட்டம்

Dr Rajitha Senaratne Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lankan political crisis
By S P Thas May 16, 2022 11:59 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள்.

இதுவரை கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு ரணில் அழைக்கவில்லை என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவாக அமைச்சரவை அமைக்கப்பட்டால்தான் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வர். இப்போதும் அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடல்களை நடத்த முடியும்.

அதேவேளை, சரியான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றார். இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய அவர், இந்த நடவடிக்கையும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமே நான் பார்க்கிறேன்.

இதற்கிடையில், சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது என்றார்.

முன்னதாக சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்த போதிலும், அதனை அவர் மறுத்திருந்தார். எனினும், ரணில் விக்ரமசிங்க தான் பதவியேற்கத் தயார் என்று அறிவித்ததன் பின்னர் சஜித் கோட்டாபயவிற்கு நிபந்தனை விதித்து தானும் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமராக ரணில் பதவியேற்றதன் விளைவு, சஜித் அந்த வாய்ப்பை இழந்தார். அதேபோன்று தற்போதைய அரசியல் சூழலில் எதிர் கட்சி தலைவர் பதவியையும் அவர் இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்