அடுத்தடுத்து ரணில் வகுக்கும் திட்டங்கள்
இலங்கையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்ததை கொண்டுவருவதற்கான பேச்சுக்கள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கான வரைபு தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இன்று பேச்சு நடத்தப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் சுகாதாரம், உணவு மற்றும் விவசாயத் துறைகளுக்கு உதவிகளை வழங்க அவர்கள் முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நாட்டின் பொருளாதாரத்திற்கு உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலை எழுந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வங்கிகளில் டொலர்களின் கையிருப்பில் பற்றாக்குறை காணப்படுவதால், வேறு வழிகள் ஊடாக நிதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான மதிப்பாய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும், நாளை அது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
