கள்ளன் - காவல்துறை விளையாட்டை விளையாடும் ரணில் - ராஜபக்சாக்கள்
மக்கள் தொடர்பில் பசில் ராஜபக்ச மிகுந்த அச்சத்திலேயே இருப்பதாகத் தெரிவிக்கும் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, ரணில் - ராஜபக்ச ‘திருடன் -காவல்துறை’ விளையாட்டையே விளையாடி கொண்டிருப்பதாகவும் கேலி செய்தார்.
ராஜபக்சாக்களும் ரணில் விக்ரமசிங்கவும் கள்ளன் காவல்துறை விளையாட்டையே விளையாடி வருகிறார்கள். ரணில் - ராஜபக்சர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதும் ராஜபக்சர்கள் ரணிலுக்குப் பொறுப்புகளை வழங்குவதுமே அரசியலில் இத்தனை காலமாக நீடித்திருந்தது.
ஓரிடத்திற்கு வந்த ரணில் - ராஜபக்சாக்கள்
எவ்வாறாயினும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இதனை சவாலுக்கு உட்படுத்தினார்கள். இதன் பின்னர், எதிர் எதிர் திசையிலிருந்து கள்ளன் - காவல்துறை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த ரணில் - ராஜபக்சாக்கள் ஓர் இடத்துக்கு வந்துள்ளனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பேச்சுகளை நன்கு அவதானித்தால், அவர் போராட்டக்காரர்களுக்கும் சோஷலிச முன்னிலைக் கட்சிக்கும், காவல்துறை ஆணைக்குழுவுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குமே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
மிகுந்த அச்சத்தில் பசில் ராஜபக்ச
உண்மையில், பசில்ராஜபக்ச, மக்கள்
மீது மிகுந்த அச்சத்தில்
இருக்கிறார். ஜூலை 09ஆம்
திகதி போராட்டத்துக்கு
சுமார் 10 இலட்சம் பேர்
வந்ததாக அரச புலனாய்வுப்
பிரிவின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில்
போதைப்பொருளுக்கு
அடிமையானவர்கள்,
விபசாரத்தில் ஈடுபடுபவர்கள்
என அனைவரும் இருந்தார்கள்.
நாட்டின் அரசியல் தொடர்பில்
பேசுவதற்கு அவர்களுக்கும்
உரிமை இருக்கிறது எனவும்
தெரிவித்தார்.