சமூக வலைத்தளங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை : ஆஷு மாரசிங்க

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Beulah Sep 26, 2023 12:58 AM GMT
Report

உலக அரசியலுடன் இணைந்து செல்லக்கூடிய ஒரு தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இலங்கையில் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுக்கொள்கைக்கு தற்போது பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை - அனுரகுமார சூளுரை

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை - அனுரகுமார சூளுரை

ஒரே தலைவர்

அதிபர் மேற்கொண்டு சென்ற வெளிநாடுகளில் அங்குள்ள தலைவர்கள் அதிபர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன் நாட்டுக்கு உதவி செய்யவும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை : ஆஷு மாரசிங்க | Ranil Sl Prevention Of Terrorism Act

கியுபாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்த கிடைத்தமை எமக்கு பெரும் கெளரவமாகும்.

கியுபா சோசலிச நாடாகும். அவ்வாறு இருந்தும் எமது நாட்டு தலைவருக்கும் அந்த மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்த கிடைத்தமை எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை எந்த நாட்டையும் சார்த்ததாக இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதேபோன்று அடுத்ததாக அதிபர் ஜேர்மன் நாட்டுக்கு செல்ல தயாராக வருகிறார். அங்கு அந்நாட்டு அதிபர் உட்பட தலைவர்களை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்.

இதன்போது நாட்டுக்கு தேவையான உதவிகளையும் பெற்றுக்கொள்ள அதிபர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இவ்வாறு வெளிநாட்டு தலைவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் எமது தேவைகளை சொல்ல முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பது யாரும் அறிந்த விடயமாகும்.

அத்துடன், அரசியல் அனுபவம் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியுமான இலங்கையில் இருக்கும் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகும்.

மேலும் நாட்டை அபிவருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதனை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் 

குறிப்பாக சமூகவலைத்தளங்களை அடக்கி, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நிகழ்நிலை காப்பு சட்டமூலம் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை : ஆஷு மாரசிங்க | Ranil Sl Prevention Of Terrorism Act

அவர்களின் கருத்துக்களில் எந்த உண்மையும் இல்லை. மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

சமூக வலைத்தளங்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

ஆனால் சமூகவலைத்தலங்கள் ஊடாக சமூக விராரேத செயற்பாடுகள் இடம்பெறுவது, இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தூண்டும் விடயங்களை பகிர்வதை தடுப்பதற்கு முடியுமான ஒழுங்குவிதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் சமூகவலைத்தலங்களை அடக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கமையவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டமூலங்கள் தயாரிக்கப்பட முன்னர் இதுதொடர்பாக அனைத்து தரப்பினர்களதும் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கின்றன, அந்த ஆலோசனைகளுக்கமையவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.” என்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024