ரணிலுக்கு கிடைக்கப்போகும் பிரியாவிடை
Ranil Wickremesinghe
Election
By Sumithiran
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மரியாதையான பிரியாவிடை கிடைக்கும் என ராஜபக்சாக்களின் உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிபர் தேர்தலில் ரணில் போட்டியிட மாட்டார்

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட மாட்டார்.
கட்சித் தலைவர்கள் என்ன கூறினாலும் மொட்டு கட்சியினர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விக்ரமசிங்கவிற்கு 2024ஆம் ஆண்டு மரியாதையான பிரியாவிடை கிடைக்கும் என்றார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி