அச்சுறுத்தல் காரணமாகவே 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தோம்! மு.கா உறுப்பினர்கள் விளக்கம்
அரசியலமைப்பினள் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியிலும், பொது மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடம் நேற்றையதினம் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடியது.
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக 20 ஆவது அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
ஆதற்கு எமது உயர்பீடம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இந்த தவறுக்கு பொது மக்களிடத்தில் மன்னிப்பு கேட்பது அவசியம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு 20 ஐ ஆதரித்த உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டனர்
அவர்களின் செயற்பாடு குறித்து எமது உயர்பீடம் கவலையடைகின்றது´ என்றார்.
எவ்வாறாயினும் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதியளிப்பதாக தெரிவித்த உறுதிப்பாட்டுக்கு அமையவே 20 க்கு ஆதரவளித்தாக 20 ஐ ஆதரித்த உறுப்பினர்கள் கூறினர்.
இதன்போது 20ஐ ஆதரித்த முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாயிஸர் காசிம், எச்.எம்.எம் ஹரிஸ், எம்.எஸ் தௌப்பீக் மற்றும் அன்வர் சாமேட் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.