பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு : மரணத்தில் உறவினர்கள் சந்தேகம்!
திருகோணமலை ,குச்சவெளிப் பிரதேசத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, புல்மோட்டை வீதியில் யான் ஓயா பகுதியில் பல குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை கைது செய்ய குச்சவெளி காவல்துறையினர் முயற்சித்துள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில், காவல்துறையினரிடம் இருந்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். பின்னர் நேற்று யான் ஓயாவிற்கு அருகில் உள்ள சிறிய நீர்நிலையொன்றில் இருந்து குறித்த நபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்றதுடன், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பிரேத பரிசோதனை அறிக்கையை உயிரிழந்தவரின் உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது