கொட்டித்தீர்க்கும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
Department of Meteorology
Northern Province of Sri Lanka
Weather
By Jaso
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்யும் கடும் மழையுடன் கூடிய காலநிலை நாளை (11) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிவிப்பில்,
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை
மேற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்