றீச்சாவில் தீ வைத்த விசமிகள்! 200 ற்கு மேற்பட்ட தென்னைகள் நாசம்
Tamil
Reecha
Baskaran Kandiah
By Dilakshan
வடக்கின் பிரபல சுற்றுலாத் தலமான றீச்சா பண்ணையின் தென்னைகளுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் காரணமாக பண்ணையில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட தென்னைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
கடந்த நாட்களாக போலியான குற்றச்சாட்டுகளால் றீச்சா குறிவைக்கப்பட்டு வந்த நிலையில், இந்தச் செயல் திட்டமிட்ட பழிவாங்கலாகவே கருதப்படுகிறது.
குறித்த விடயத்திற்கு றீச்சா பண்ணையின் நிர்வாகம் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ள நிலையில், இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
