எம்.பிக்களின் செயற்பாடு - பொதுவெளியில் கடுமையாக விமர்சித்த சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வகையிலும் கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உள்ள போதிலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்து தமக்கு மட்டுமன்றி மக்களையும் அவமரியாதை செய்யும் வகையில் நடந்துகொள்வது வருந்தத்தக்கது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், புனித பல்லக்குக்கு வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எல்லாவற்றையும் எதிர்ப்பதுதான் பொருத்தமானது என்றும், நியாயம் என்றும் சிலர் நினைத்தாலும், நாடு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இது எம்.பி.க்களின் கௌரவத்துக்கும் ஊறு விளைவிக்கும் என்றும் யாப்பா தெரிவித்தார்.
கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்படுகின்ற இவ்வேளையில் கொழும்புக்கு வந்து போராட்டங்களை நடத்துவது நியாயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் நெருக்கடி தீர்க்கப்படும் வரை அனைத்து தனிநபர்களும் தனித்தனியாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினால் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், உற்பத்தி வீழ்ச்சியால் இதுவரை உலக நாடுகளின் வர்த்தகப் போக்கை மாற்றியுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.