காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஓ.எம்.பி முன்னிலையில் வாக்குமூலம் (படங்கள்)
Missing Persons
Trincomalee
By Vanan
திருகோணமலை மற்றும் மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணைக்குழு (ஓ.எம்.பி) முன்னிலையில் இன்று(03.09.2023) வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் விசேட கூட்டமும் விசாரணையும் இடம்பெற்றது.
ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம்
இதன்போதே குறித்த பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்தனர்.

பல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது வாக்குமூலங்களை அளித்ததுடன், ஆணைக்குழுவினர் அதனை பதிவு செய்து கொண்டனர்.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணையாளர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எமது இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் போராடுவோம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எச்சரிக்கை