வாகன இலக்கத் தகடுகளில் ஏற்பட்ட மாற்றம்! வெளியானது காரணம்
இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் இருந்து மாகாணக் குறியீடுகள் நீக்கப்பட்டமையானது, தோல்வியடைந்த ஒரு திட்டத்தின் விளைவு என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) ஒப்புக்கொண்டுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் (COPF) முன்னிலையில் அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் போது, வாகனங்கள் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவை என்பதை காவல்துறையினர் எளிதாகக் கண்டறியும் வகையில் 'ரேடியோ அதிர்வெண் அடையாள' (RFID) தொழில்நுட்பம் மற்றும் மாகாணக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தொழில்நுட்ப வசதிகள் இன்மை
இருப்பினும், இந்த RFID தொழில்நுட்பத்தை வாசிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் காவல்துறையினரிடம் இல்லாத காரணத்தினால், இத்திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. இதன் விளைவாகவே, பின்னர் வந்த இலக்கத் தகடுகளில் இருந்து மாகாணக் குறியீடுகள் மற்றும் RFID அம்சங்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிலர் விசேட இலக்கத் தகடுகளுக்காக அதிக பணம் செலுத்தி வந்தமையும் இந்த முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு மற்றொரு காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் போர்ச் சூழல் இல்லாததால் இத்தகைய கண்காணிப்பு முறை தேவையில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளதோடு, மீண்டும் மாகாணக் குறியீடுகளைக் கொண்டுவருமாறு எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |