கார் ஒன்றில் இருந்த பெருந்தொகை வெடிபொருட்கள்! சந்தேகநபர் அதிரடி கைது
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கசகல நுழைவாயிலில், வாடகைக் காரில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களைக் கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கல்லை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள்
அதன்போது, அவரிடமிருந்து 14 கிலோகிராம் வெடிமருந்து, 240 ஜெலட்டின் குச்சிகள், 350 கிலோகிராம் அம்மோனியா, 490 டெட்டனேட்டர்கள் மற்றும் 5,600 அடி நீளமுள்ள வெடிமருந்துக் கம்பி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர், முல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரியவருகிறது.
விசாரணையின் போது, பாறைகளை உடைப்பதற்காக இந்த வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி