தகர்க்கப்படும் சட்டவிரோத கட்டடங்கள்! திருமலையில் அதிரடி
கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத காணிகளையும் கட்டிடங்களையும் அகற்றி, அரச உடமையாக்கும் நிகழ்வு இன்று(03) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, கிண்ணியா பிரதேச செயலாளர் எம் .எச் .எம் கனி தலைமையில் நீதிமன்ற பதிவாளர் மற்றும் அதிகாரிகள், காவல்துறை, கிண்ணியா பிரதேச செயலக காணி உஸ்தியோகத்தர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
கிண்ணியா கச்சக்கொடு தீவு பகுதியில் சட்டவிரோதமாக பெறப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1979 ஆம் ஆண்டு காணி சுவிகரிப்பு சட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று(03) பதிவாளர் பிஸ்கால் ஓடரை வழங்கி காணி மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் பெக்கோ இயந்திரம் இட்டு அழிக்கப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற தீர்ப்பு
சட்ட விரோத காணி மட்டும் கட்டிடங்களை வைத்திருந்தவர்கள் நிகழ்வின்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர், இருந்தபோதும் நீதிமன்ற தீர்ப்பின்படி காவல்துறையினரின் உதவியுடன் கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளன.
கச்சக்கொடு தீவில் நீண்ட காலமாக இளைஞர்கள் விளையாடி வந்த மைதானம் ஒன்றும் சட்ட விரோதமாக கைப்பற்றியவரிடம் இருந்து அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நடைபெறுகின்ற போது பெருமளவான இளைஞர்கள் கூடியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
