விஜய் தலைமையிலான த.வெ.கவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி!

Vijay Tamil nadu India Madras High Court
By Dilakshan Oct 03, 2025 01:32 PM GMT
Report

கரூரில் கடந்த 27 ஆம் திகதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பேரவல சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் இன்று விசாரணை நடத்தியுள்ளார்.

யாழில் இருந்து பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்ட சட்டத்தரணி சொல்லும் கதை!

யாழில் இருந்து பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்ட சட்டத்தரணி சொல்லும் கதை!


விஜயின் தலைமைத்துவம்

அதன்போது அவர், கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும், தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

விஜய் தலைமையிலான த.வெ.கவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி! | Karur Incident Tvk Vijay High Court Investigation

“சம்பவம் நடந்தவுடன் ஏற்பாட்டாளர்களும் தலைவரும் தொண்டர்களையும் பின்தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர். அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோதும், நிகழ்ச்சி நடத்தியவர்கள் மொத்தமாக வெளியேறிச் சென்றனர். 

இது கட்டுப்படுத்தப்படாத கலவரம்போல நடந்துள்ளது” என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

விஜயின் பிரச்சார பேருந்து

மேலும், இந்தச் சம்பவத்துக்கு காரணமான விஜயின் பிரச்சார பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என்று காவல்துறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

விஜய் தலைமையிலான த.வெ.கவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி! | Karur Incident Tvk Vijay High Court Investigation

இருசக்கர வாகனங்கள் சிக்கிய நிலையில் பேருந்து சென்ற காணொளி உள்ளதாகவும், சாரதி வெளியே எட்டிப் பார்த்தும் வாகனத்தை நிறுத்தாதது அதிர்ச்சியாக உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரப்புரையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டீர்களா, ஏன் இத்தனை தாமதம் எனவும் நீதிபதி தொடர்ந்து அரசுத் தரப்பை வினவியுள்ளார்.

மகிந்தவின் மெய்பாதுகாவலர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மகிந்தவின் மெய்பாதுகாவலர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்


ஆதவ் அர்ஜூனாவின் பதிவு

“சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது” என்று எச்சரித்த நீதிபதி, காணொளி காட்சிகளைப் பார்ப்பது வேதனையளிக்கிறது என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் தலைமையிலான த.வெ.கவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி! | Karur Incident Tvk Vijay High Court Investigation

இதேவேளை, த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கட்சி நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் மதுரை கிளையில் விசாரணையில் உள்ளன. 

இதன்படி, ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில் “புரட்சியை ஏற்படுத்த வேண்டும்” என பதிவிட்டதை கண்டித்த உயர்நீதிமன்றம், அதன் பின்புலத்தை காவல்துறை விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க வேண்டுமா எனவும் அரசு தரப்பிடம் நீதிபதி கடுமையான கேள்விகளை தொடுத்துள்ளார்.

இமாலய எல்லை மோதல்! ஐந்து வருடங்கள் கழித்து சீனாவினுள் புகும் இந்திய விமானங்கள்

இமாலய எல்லை மோதல்! ஐந்து வருடங்கள் கழித்து சீனாவினுள் புகும் இந்திய விமானங்கள்

தமிழகத்தில் பரபரப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் வீடுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் பரபரப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் வீடுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           
ReeCha
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026