தற்போதைய ஜனாதிபதியும் ஒரு கொலையாளி...! கடுமையாக சாடும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Political Development
By Independent Writer Jul 21, 2025 07:38 AM GMT
Report

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (21.07.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர் தமிழ் இனப்படுகொலைக்கான தருணம் பார்த்திருந்து.

ஈஸ்டர் தாக்குலில் முன்னாள் ஜனாதிபதிகளின் பங்கு: அரசாங்கத்திற்கு அழுத்தம்

ஈஸ்டர் தாக்குலில் முன்னாள் ஜனாதிபதிகளின் பங்கு: அரசாங்கத்திற்கு அழுத்தம்

தமிழர்களின் அவலக் குரல்

அதனை வழிநடத்த அரசியல் வாதிகளை நேரடியாக களத்தில் இறக்கியதோடு பௌத்த துறவிகளையும், குண்டர்களையும், அடிமட்ட சிங்கள மக்களையும் ஏவி தமிழர்களின் அவலக் குரலும் அவர்களின் சாம்பலிலும் மகிழ்ந்த கருப்பு ஜூலை 83 ஐ தொடர்ந்து 42 ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் இனப்படுகொலை நிகழ்த்திக் கொண்டிருக்கையிலும் "இனப்படுகொலை நிகழவில்லை"என கூறுவதோடு "சமூக புதைகுழிகளை தோண்ட தேவை இல்லை" எனக் கூறுவதும்.

தற்போதைய ஜனாதிபதியும் ஒரு கொலையாளி...! கடுமையாக சாடும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் | Rev M Satthivel Blame Anura Gov

இனப்படுகொலையில் நீட்சியின் கோரம் மட்டுமல்ல நீதி, நியாயம், உண்மை, பௌத்த தர்மம் என்பவற்றை சமூக புதைகுழிக்குள் தள்ளியதன் வெளிப்பாடு எனவும் கூறலாம்.

ஜெ.ஆர். ஜெயவர்த்தன (J R Jayawardena) தலைமையில் 6/5 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்துக்கு எதிராக 1980 இல் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தினை அராஜகமாக அடக்கி ஒடுக்கி அது மீண்டும் எழுச்சி கொள்ளாதிருக்க இன அழிப்பு நாடகத்தினை 1983 ஜூலையில் நிறைவேற்றியதோடு தமிழ் இளைஞர் கையில் ஆயுதத்தையும் திணித்து சிங்கள தொழிலாளர் வர்க்கத்தையும் கிராமிய சிங்கள இளைஞர்களையும் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி நாட்டை அழிவிற்குள் தள்ளினர்.

7 மாதங்களில் 68 துப்பாக்கிச்சூடுகள்! காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் அமைச்சர் ஆனந்த விஜயபால 

7 மாதங்களில் 68 துப்பாக்கிச்சூடுகள்! காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் அமைச்சர் ஆனந்த விஜயபால 

அழித்து தீட்டு கொளுத்தியவர்கள்

வடக்கு கிழக்கு தமிழர் தேசத்திற்கு வெளியே தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தீட்டு கொளுத்தியவர்கள் பச்சிளம் பாலகர்கள், வாலிபர்கள் வயது முதிர்ந்தோர் கண்ணில் கண்டோரை தாக்கியும் 3000 க்கும் அதிகமானோரை வெட்டியும், குத்தியும் தீக்குள் தள்ளியும் இனப்படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர்.

தற்போதைய ஜனாதிபதியும் ஒரு கொலையாளி...! கடுமையாக சாடும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் | Rev M Satthivel Blame Anura Gov

இதற்கு அரசு வளங்களும் படையினரும் பாவிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு எங்கும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இதுவே நடந்தது.

இனப்படுகொலையின் உச்சம் 2009ல் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போதும் அதில் திருப்தி கொள்ளாத சிங்களப் பேரினவாதம் தொடர்ந்தும் பல்வேறு வடிவங்களில் இன அழிப்பு இனப்படுகொலை என்பவற்றை தொடர்ந்து கொண்டே இருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

கண்ணீர் சிந்தாத மக்களிடமிருந்தும் ஒரு பிடி நெல்

ஒரு தடவை புத்த பெருமான் தம்மிடம் வந்த ஒரு தாயிடம் "மரணம் நிகழாத வீட்டில் இருந்து ஒருபிடி எள் கொண்டு வாருங்கள்" என்றார். அது போன்று சர்வதேச சமூகமும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிமும் கேட்கின்றோம்.

தற்போதைய ஜனாதிபதியும் ஒரு கொலையாளி...! கடுமையாக சாடும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் | Rev M Satthivel Blame Anura Gov

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கூறுங்கள்"தமிழர் தாயகத்தில் இனப்படுகொலை நிகழாத கிராமத்திலிருந்தும், அதனால் பாதிக்கப்படாத குடும்பங்களில் இருந்தும் கண்ணீர் சிந்தாத மக்களிடமிருந்தும் ஒரு பிடி நெல் கொண்டு வருமாறு கூறுங்கள்.

அவர்களால் அதனை செய்ய முடியாது காரணம் தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு.

தமிழர்களைப் பொறுத்தவரை நாட்டில்1983 ஆம் ஆண்டு ஜூலை மட்டுமல்ல கறுப்பு. இந்த நாட்டின் சுதந்திரம், அரசியல் யாப்பு, பயங்கரவா தடை சட்டம், அரசியல் யாப்பின் 13 ம் திருத்தம் எனபவற்றோடு ஆட்சியில் அமரும் அத்தனை அரசாங்கங்களும் பேரினவாத கடும் கருப்பே. இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எந்த நீதியும் கிட்டப் போவதில்லை.

ஆதலால் 1983 கறுப்பு ஜீலையின் 42 ஆம் நினைவாண்டில் சர்வதேச வல்லரசுகளே, ஐ.நா மன்றமே,ஐ.நா மனித உரிமை பேரவையே உங்கள் அரசியல் காக குற்றவாளிகள் கூண்டில் இருக்கும் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான நீதியை கையளிக்காது

சுதந்திர தேசமாய் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு இனப்படுகொலை புரிந்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான அரசியல் நீதிக்கு வழி விடுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நாவைப் பலவீனப்படுத்தும் அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழரசுக்கட்சி

ஐ.நாவைப் பலவீனப்படுத்தும் அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழரசுக்கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026