யாழ். கோப்பாயில் விபத்து - பேருந்து நிலையத்தை உடைத்துக் கொண்டு புகுந்த வாகனம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Arrest
By Thulsi
கோப்பாய் பகுதியில் பேருந்து தரிப்பு நிலையத்தை உடைத்துக் கொண்டு புகுந்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணம் (Jaffna) - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (12.01.2026) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விசாரணை
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனமானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் சந்திப்பகுதியிலுள்ள பேருந்து தரிப்பு நிலையத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியது.

குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இன்று காலை வாகனத்தை மீட்ட கோப்பாய் காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி