யாழ் நகரில் வயோதிபரை மோதித் தள்ளிய வாகனம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்
யாழில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் பின்னால் வந்த உழவியந்திரம் (டிராக்டர்) மோதி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் - நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நாவாந்துறை கடற்கரை வீதி வழியே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாதசாரியாக நடந்து சென்றுள்ளார்.
முதியவர் மீது மோதி விபத்து
இதன்போது, அவருக்கு பின்னால் வந்த நாவாந்துறை மீன் வாடிக்கு சொந்தமான உழவியந்திரம் ஒன்று, எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் உழவியந்திரத்தின் அடியில் சிக்கி முதியவர் கடுமையான காயங்களுக்குள்ளானார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர் விபத்துக்கள்
குறிப்பிட்ட நாவாந்துறை மீன் வாடிக்கு சொந்தமான இந்த உழவியந்திரம், மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் ஏற்படுத்தும் இரண்டாவது விபத்து இதுவாகும்.

விபத்து நடந்த சமயத்தில் அந்த உழவியந்திரத்தை செலுத்திய சாரதியிடம், வாகனத்தை இயக்குவதற்கான எந்தவொரு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமமும் (Driving License) இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாத சாரதிகளை கொண்டு, மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதிகளில் இவ்வாறான கனரக வாகனங்களை இயக்குவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறுகிய காலத்திற்குள் இதே வாகனம் இரண்டாவது முறையாக விபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரதிக்கு உரிமமும் இல்லை. இது அப்பட்டமான அலட்சியம்" என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |