மட்டக்களப்பில் 40 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட வீதி
மட்டக்களப்பில் கடந்த 40 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்ட வீதியொன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதியே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதி நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்தமையால் அப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டனர்.
மக்கள் கோரிக்கை
இந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இவ் வீதியியை ஜேசி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடும் பணி நேற்று (28) முன்னெடுக்கப்பட்டது.
அப்பகுதியிலுள்ள சுமார் 150இற்கு மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த வீதி விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன் இவ்வீதியை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாற்றிய பிரதேச சபையின் செயற்பாட்டிற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |